Skip to main content

Posts

Showing posts from June, 2020

காற்றும் குழலும்

கருங்குழல் பட்டினை கரம் கொண்டு தொட்டொரு   தந்தியாய் மாற்றிடும் காற்று   விளைகின்ற இசையினில் குரலிலை மொழியிலை விரிந்ததோர் ஆகாய மௌனம்   image courtesy

ஞானக்கூற்று

கரு பூக்கும் முன் நான் இல்லை கல்லறையில் கரைந்த பின்னும் நான் இல்லை இடை வந்த பொழுதில் , உள் இழுத்துவிடும் காற்றின் விசையில் வடிவமாய் அலைந்து , முடிவினில் நீள் படுத்த பிணமாய் மாறிவிடின் நான் என்பது நிஜமா காற்றென்பதோ நிஜம் காற்று புகுந்து விளையாடி ஓய்ந்து விட்டு சென்ற பொருளோ என் சடலம் என்னுள் மலர்ந்து பின் எனக்குள்ளே மடிந்து போன கனவோ நான் கண்ட என் வாழ்க்கை கனவுக்கும் மெய் கண்ட நனவுக்கும் இடைதூரம் அறிவதுதான் ஞானமொ . image courtesy

முகப்பு

அத்திமர நிழலோரம் வார்த்தைகளைக் கோர்த்திருப்பேன் வழிப்பிள்ளையார் அருகமர்ந்து சரம் கோர்க்கும் பித்தனைப்போல்   சில பூக்கள் கமகமக்கும் மருந்தளவு எருக்கம்பூ அதிலிருக்கும் அவசரக் கைபறித்த தண்டோடு முள்ளிருக்கும்   சிலபூக்கள் கணநேரத்தில் சருகாகும் சில பூக்கள் ஒரு வேளை அழியா வரம் சுமக்கும்   வழிநடந்த வலிசுமந்துவரும் காலில் தனைசுமந்து - இம் மரநிழல் தேடிவரும் அன்பார்ந்த நல்மனமே ஒருபொழுது அருகமர்ந்து சரக்கோர்வை தனைக்காண்க   உள்ளம் நனைக்க ஒரு கைய்யளவு தண்ணீர் பருகுக